பிரதமர் ரணில் விக்ரம சிங்க திருமலைக்கு விஜயம்


ஹஸ்பர் ஏ ஹலீம்-


திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று (23) சனிக் கிழமை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் அவர்கள் வரவேற்றார்.


நிலாவெளி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள மைதானத்தில் விமானம் மூலமாக திருகோணமலையை வந்தடைந்த பிரதமரை பிரதியமைச்சர் உற்சாக வரவேற்பளித்தார்.


திருகோணமலை லஷ்மி நாராயண கோயிலில் வசேட பூஜை வழிபாட்டில் பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளதுடன் இன்னும் பல பௌத்த விகாரைகளுக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் வழிபாட்டிலும் ஈடுபடவுள்ளார்.
குறித்த வரவேற்பு நிகழ்வில் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டாக்டர் அருண சிறிசேன அவர்களும் உடனிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -