மைத்திரி- மகிந்த இருவருடையே மீண்டும் முரண்பாடு..!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் அமைக்கும் கூட்டணியில் தலைவர் மைத்திரியா - மஹிந்தவா என்பதிலும் இரு தரப்பிடையில் முரண்பாடுகள் நிலவுகின்றன. ஆகவே பிரதான காரணிகள் குறித்து ஆராய இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்று அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று இரவு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில் அடுத்த சகல தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய இரண்டு கட்சிகள் இணைந்து பொது கூட்டணி ஒன்றினை அமைத்து களமிறக்குவது குறித்து ஆராயப்பட்டது.

எனினும் அதில் தற்போது வரையில் பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்படவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான உறுப்பினர்கள் அதற்கான இணக்கப்பாட்டை எட்ட விரும்பாத காரணத்தினால் கூட்டணி அமைப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை நிலவுகின்றது.

எனினும் இது குறித்து ஆராயவும் தீர்மானம் ஒன்றினை எட்டவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களை இணைத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்ந்தும் இந்த நிலைமை குறித்து ஆராயவுள்ளனர்.

அதேபோல் கட்சியின் தலைமைத்துவம் யாருக்கு சென்றடைய வேண்டும் என்ற விடயத்திலும் இருண்டு கட்சிகள் இடையில் இழுத்தடிப்பு நிலைமை நிலைவுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவே கூட்டணியின் தலைவராக இருப்பார், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியே பிரதான கட்சியாக அங்கம் வகிக்கும் என்ற கருத்தினை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி அணியினர் அது குறித்து மௌனம் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெருமவிடம் வினவியபோது அவர் கூறியதானது,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணைந்து கூட்டணி அமைப்பது குறித்து பேசப்பட்டு வருகின்ற போதிலும் கூட இன்றுவரை இறுதித் தீர்மானம் ஒன்றினை எட்ட முடியாதுள்ளது.

ஆகவே இது குறித்து ஆராய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் மூவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் குழுபோன்று நியமிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் குழுவை அமைக்கும் பொறுப்பு பசில் ராஜபக்ஷ மற்றும் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரையில் பொது சின்னமோ, பெயரோ அல்லது கொள்கையோ உருவாக்கப்படவில்லை என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -