வவுனியா நெடுங்கேணியில் ஒரு இலட்சம் ரூபாய் போலி தாள்கள் மீட்பு

பாறுக் ஷிஹான்-
வுனியா நெடுங்கேணியில் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான போலி தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது,

நெடுங்கேணி பொலிஸார் நேற்று(10) இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை சந்தேகத்திற்கு இடமான ஒரு நபரினை சோதனை செய்துள்ளனர். இதன் போது குறித்த நபரிடம் இருந்து 5000 ரூபாய் தாள்கள் 18ம் 1000 ரூபாய் தாள்கள் 10 அடங்கலாக ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கள்ள நோட்டுக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம்(11) குறித்த நபரினை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா நெடுங்கேணி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -