தென்கிழக்குப் பல்கலையில் (2019) அரசாங்க சேவை ஊழியர்களின் சத்தியபிரமாணம்!!!

எம்.வை.அமீர்-
பிறந்துள்ள புதிய ஆண்டின்(2019) அரசாங்க சேவை உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை ((2019.01.01) காலை பதிவாளர் அல் ஹாஜ் எச்.அப்துல் சத்தார் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் கலந்துகொண்டு கருத்துரையாற்றினார்.
இந்நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்களுக்குமாக 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் புதிய ஆண்டுக்கான உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணமும் இடம்பெற்றது.
இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சகல தரப்பு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 























எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -