மாணவர்களுக்கான மாபெரும் இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு – 2018


பி.எம்.எம்.ஏ.காதர்-
வ்வருடம் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரம் எழுதிய மற்றும்எழுதவுள்ள மாணவர்களுக்காக டுளைடிசழ இனால் இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கொன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கானது 2018 டிசம்பர் மாதம் 16ஆம் திகதி ஞாயிறு காலை 8.30 மணி தொடக்கம் 12.00 மணி வரைஅனுராதபுரம் உதய மாவத் தையில் உள்ள CTC மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி கருத்தரங்கானது அடுத்து என்ன? (What next?) என்ற தொனிப்பொருளில் மாணவர்கள் எவ்வாறுஉயர்தரத்தில் தங்களது கல்வியை தொடர்தல், உயர்தர பரீட்சையை எவ்வாறு முகம் கொடுத்தல் மற்றும்மேற்படிப்புகளை தெரிவுசெய்தல் என்பதுடன் விடுமுறைக்காலத்தை எவ்வாறு பிரயோசமுடையதாக மாற்றலாம்என விளக்கமளிக்கப்படவிருக்கின்றன.
மேலும் இக்கருத்தரங்கில் எதிர்கால முதல் தர துறைகள் எவை? எந்த துறையினைத் தெரிவு செய்வது? எவ்வாறுவெற்றி அடைவது? போன்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளன.

அநுராதபுர பிரதேச வரலாற்றில் தமிழ் மொழியில் முதல் முறையாக நடைபெறும் இந்நிகழ்வில்மாணவர்களாகிய நீங்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுவதோடு, உங்கள் நண்பர்களுக்கும் இந்நிகழ்வுபற்றி அறியத்தந்து அவர்களையும் அழைத்து வர முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இக்கருத்தரங்கு தமிழ் மொழி மூல மாணவ சமுதாயத்தில் ஒரு கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில்சந்தேகமில்லை.

பிரதான விரிவுரையாளர்கள்

A. Mohamed Rifnaz (MBA – Col, C. Eng – MIESL, BSc. Eng. (Hons))

Suhail Jamaldeen (MSc in IT, Microsoft MVP, Software Engineer)

A.S. Fathima Rifana (MSc in Plant Protection and Biotechnology, BSc (Hons) Agri Spcl


தகவல்களுக்கு - 077 223 1111, 025 205 1273

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -