ஏறாவூரில் மீலாத் ஊர்வலம்!!!

ஏ.எம்.றிக்காஸ்-
றைதூதர் முஹம்மது நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான மீலாத் நிகழ்வு ஏறாவூரில் 20.11.2018 நடைபெற்றது.
ஏறாவூர் அஹலுஸ் ஸுன்னா மீலாத் குழு இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
ஆறு அறபுக்கல்லூரிகள் மற்றும் ஆறு குர்ஆன் மதரசாக்களையும் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மார்க்கப் பெரியார்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஆற்றங்கரையோர ஒலியுல்லாஹ் அடக்க ஸ்தல முன்றலில் நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் விசேட பிரார்த்தனையினையடுத்து வாகன பவனி ஆரம்பமானது.
தைக்காவடி, சத்தாம் ஹுஸைன் உள்ளிட்ட கிராமங்கள் ஊடாக புன்னக்குடா வீதியைக்கடந்து மணிக்கூட்டுக்கோபுரச் சந்தியில் முடிவடைந்தது.
பின்னர் அங்கிருந்து ஆரம்பமான நடைபவனி பிரதான வீதியிலுள்ள முகைதீன் ஜும்ஆப்பள்ளி வாயல் முன்றலில் நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் வந்தோரை ஏறாவூர் நகர சபை முதல்வர் ஐ. அப்துல் வாசித் நகர சபைக்கு முன்பாக நின்று கைலாகு செய்து ஊர்வலத்தில் இணைந்துகொண்டார்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -