இலங்கை அதிபர் சேவை போட்டிப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகளின் நலன் கருதி டீ.எம்.கே.அசோசியேட் ஒழுங்கு செய்துள்ள இலவசக் கருத்தரங்கு எதிர்வரும் டிசம்பர் 01 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் சாய்ந்தமருதில் நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கில் பங்குபற்ற விரும்புவோர் 0775746881 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அனுபவம், தேர்ச்சி மிக்க வளவாளர்களான எம்.ஏ.சி.அஹமட் ஷாபிர் (SLAS), முஹம்மட் அலி ஜின்னா (SLEAS), எம்.எம்.றியாஸ் ஆகியோரினால் கிரகித்தல், நுண்ணறிவு, பொது அறிவு, பாடசாலை நிர்வாகம் பற்றிய நிகழ்வுகளின் ஆய்வு போன்ற பாடங்களுக்கு தோற்றுவதற்காக பரீட்சாத்திகள் பயிற்றுவிக்கப்படவுள்ளனர்.