உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

அப்துல்சலாம் யாசீம்-
மூதூரில் அண்மையில் அடைமழையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு வெள்ள நிவாரண உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (22) காலை தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
மூதூர் பிரதேச செயலத்தின் ஏற்பாட்டிலும், குளோபல் இஹ்ஸான் றிலீப் அமைப்பின் அனுசரணையிலும் இவ் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக், குளோபல் இஹ்ஸான் றிலீப் அமைப்பின் உத்தியோகத்தர்கள் ,கிராம உத்தியோகத்தர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,சமூர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -