பாராளமன்ற உறுப்பினர் ஹரீஸ் தைரியசாலி என்கிறார் கல்முனை இப்ராகிம்!!!


வர் எப்படிப்பட்டவர் என்ற விமர்சனத்துக்கு அப்பால், அவருக்குள் சமூகம் சார்ந்த கவலையும், ஆத்திரமும் உள்ளது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

பொதுபலசேனா ரணில் தலைமையில் இயங்கும் ஒரு இயக்கம் என்று மிகத் தைரியமாக மின்னல் நிகழ்ச்சியில் கூறியவர். அந்த வீடியோ இன்றும் வைரலாக பரவிவருவதை நாம் அறிவோம். அவர் கூறிய விடயம் இன்று நிரூபணமாகி வருகின்றது எனலாம்.
அதே நேரம் 2002ம் ஆண்டு மிகத் தைரியமாக நின்று கல்முனை பசாரை காப்பாற்றியவர். அதுமட்டுமல்ல இன உணர்வு என்று வரும்போது நெஞ்சை நிமிர்த்தி முன்னுக்கு செல்லக்கூடிய தைரியசாலி.

இப்படிப்பட்டரின் திறமைகளும், உணர்ச்சிகளும் ஏதோ காரணத்தால் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது என்பதே எங்களின் கருத்தாகும். சூழ்நிலைக் கைதியாக மாட்டிக் கொண்டதனால்தான் அவர் விமர்சிக்கப்படுகின்றார் என்பதே உண்மை...

ஆகவே அரசியல் ரீதியாக அவர் என்ன முடிவை எடுத்தாலும் சரி. அது அவருடைய தனிப்பட்ட விடயமாகும். எது எப்படியோ அவர் மிக தைரியமான ஒரு மனிதர் என்பதில் என்னிடம் மாற்றுக்கருத்து இல்லை.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -