தம்பர அமில தேரர் மகிந்த அரசுக்கு எதிராக சத்தியாக்கிரகம்!!!


ற்போதைய அரசாங்கம் ஜனநாயக விரோதமானது, அது அமைக்கப்பட்ட விதம் தவறானது என குறிப்பிட்டு, அரசுக்கு எதிரான சத்தியாக்கிரக போராட்டமொன்று கொழும்பில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தம்பர அமில தேரர், சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கொழும்பு விகாராமதேவி பூங்கா பகுதியில் இந்த சத்தியாக்கிரகம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்திற்கு முன்னர் ஊடகங்களிடம் பேசிய தம்பர அமில தேரர்- “சர்வதேச நாடுகள் உங்களது நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் மாலைதீவு , சுவாசிலாந்து நாடுகள் கூட இந்த அரசாங்கத்தை ஏற்குமா என்பது சந்தேகம்தான். நாட்டில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே சதியாக்கிரகத்தில் இறங்குகிறோம்.” என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -