800 லட்சத்தை 33 நாட்களில் செலவு செய்தாரா மகிந்த?


பிரதமர் மஹிந்த ராஜபக்ச 33 நாட்களில் 800 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை அவர் உலங்குவானூர்தியில் பயணம் செய்வதற்காக அவர் இந்த பணத்தை செலவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இரத்துச் செய்யும் யோசனை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை அதரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் பிரதமருக்கு வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை சட்டவிரோதமான பிரதமர் பயன்படுத்தக் கூடாது. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்று இன்றுடன் 33 நாட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -