மாவையுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு!




காரைதீவு நிருபர் சகா-

லங்கைத்தமிழரசுக்கட்சித் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
மாவை சேனாதிராஜாவுடன் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில்
சந்திப்பை மேற்கொண்டு சமகால களநிலைவரம் தொடர்பாகக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பு இன்று(15) திங்கட்கிழமை மட்டக்களப்பில் சுமுகமாக
நடைபெற்றது. அவ்வமயம் த.தே.கூட்டமைப்பின் காரைதீவு பிரதேசசபை உறுப்பினர்
த.மோகனதாசும் சமுகமளித்திருந்தார்.

காரைதீவு பிரதேசசபையின் கடந்த 8மாதகால நகர்வுகள் மற்றும் நடைபெற்றுவரும்
வரும் அபிவிருத்திச்செயற்பாடுகள் அதற்கு தடையாகவுள்ள அதிகாரிகள் தொடர்பாக
எடுத்துரைத்தார்.

சபைக்குத் தேவையான வாகனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பேசப்பட்டது.
காரைதீவு மயான பாதுகாப்பு விவகாரம் கடலோரப்பாதுகாப்பு தரப்பினரின்
முட்டுக்கட்டை தொடர்பாகவும் பேசப்பட்டன. ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

கொழும்பு சென்றதும் உரிய அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன்
இதுவிடயங்கள் தொடர்பாகப் பேசுவதான மாவைசேனாதிராஜா உறுதியளித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -