இலங்கையில் முதன் முறையாக ஸ்மார்ட் தொலைபேசி (Smart Phone) மென்பொருள் மூலம் நடைபெறும் பொது அறிவுப் போட்டி


பொது அறிவுத்திறனை விருத்தி செய்வதற்காக Mbnsoft Technology நிறுவனத்தினால் அண்மையில் தயாரித்து வெளியிடப்பட்ட Multi Knowledge மென்பொருள் மூலம் திறந்த அறிவுப் போட்டி ஒன்று நடாத்தப்படுகின்றது.

போட்டியில் வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்குபற்ற முடியும். இப் போட்டியில் பங்குபற்றுவதன் மூலம் தேடல் அறிவைப் பெறுவதுடன் வினாக்களுக்கு விடையளிக்க முற்படும்போது பலநூறு விடயங்களை எம்மால் இலகுவாக கற்றுவிடமுடியும்.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் பணிப்பாளரிடம் வினவிய போது;

இது எமது நான்காவது போட்டியாகும். இதுவரை நடாத்தப்பட்ட போட்டிகளில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.

ஆனால் இம்முறை நடைபெறும் போட்டி சற்று வித்தியாசமான முறையில் ஸ்மார்ட் தொலைபேசிகளினூடாக நடைபெறுகின்றன.

இது எமது தேச தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியாகும், இதுவரை இவ்வாறானதொரு முயற்சி எமது நாட்டில் எங்கும் நடைபெறவில்லை, இது, நவீன கற்றலின் வடிவமாகும், இதன் மூலம் பயனற்ற ஸ்மார்ட் தொலைபேசி பாவனையிலிருந்து சமூகத்தை மாற்றி அறிவுத்தேடலின் பக்கம் கொண்டு சேர்க்கும் பாரிய முயற்சியாகும், வெற்றியீட்டும் போட்டியாளர்களுக்கு பணப் பரிசீல்களும் பெறுமதிமிக்க சான்றிதழ்களும் வழங்கப்படும். என Mbnsoft Technologyநிறுவனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
அத்துடன் எம்மை தொடர்பு கொண்டு உங்கள் பெறுமதியான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை குறிப்பிட்ட மென்பொருளின் About பகுதியில் உள்ள Feedbackமூலமாக தெரிவிக்க முடியும். எனவும் போட்டி விதிமுறைகள் மற்றும் போட்டி விபரங்கள் மென்பொருளில் பெற்றுக்கொள்ள முடியும், எனவும் அவர் குறிப்பிட்டார்.
இம் மென்பொருளை உங்கள் ஸ்மார்ட் தொலைபேசியிலுள்ள Google Play Store யில் பெற்றுக்கொள்ள முடியும்..

அல்லது இவ்விணைப்பின் மூலம் நேரடியாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
Multi Knowledge App link https://play.google.com/store/apps/details?id=com.mbnsoft.multiknowledge
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -