அட்டன் விபத்தில் இருவர் பலி - ஒருவர் கவலைக்கிடம்

க.கிஷாந்தன்-
ட்டன் – மல்லியப்பு சந்தியில் 16.09.2018 அன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளது.

விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் மேலதிக சிகிச்சைகளுக்கான டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிலிருந்து கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலவாகலையிலிருந்து அட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றும், அட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்றுமே நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் முச்சக்கரவண்டியில் சென்ற இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -