கிண்ணியா மண்ணின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கும் மற்றுமோர் தருனம்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா மண்ணின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கும் மற்றுமோர் தருனம்

கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் கே.எம்.ஹாதிம் பார்சிலோனாவுக்கு செல்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
உதைப் பந்தாட்டப் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட போட்டியில் பங்குபற்றவுள்ளார்.

அண்மையில்
இலங்கை உதைப் பந்தாட்ட சம்மேளனமும் கல்வி அமைச்சும் இணைந்து நடாத்திய ரோட் டூ பேர்சிலோனா கிண்ணத்தை பல அணிகளை தோற்கடித்து இறுதிச் சுற்றில் கிண்ணியா அல் அக்ஸா அணி சம்பியனானது

கிண்ணியா மாஞ்சோலைச்சேனையை வசிப்பிடமாகக் கொண்ட இச் சுட்டி வீரனை அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.கிண்ணியா மக்கள், அல் அக்ஸா பாடசாலை சமூகம், கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

இலங்கையிலில் இருந்து 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் தெரிவு செய்ய பட்டுள்ளமை குரிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரே சுட்டி வீரனாக ஹாதிம் விளங்குகிறார்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -