பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையத்தின் அனுசரனையில் பெரியநீலாவணை அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்ற பிராந்திய சமூதாயம் சார் சீர்திருத்த காரியாலயம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த போதை ஒழிப்பு மாநாடு சனிக்கிழமை(11-08-2018) பெரியநீலாவணை அக்பர் கிராம தக்குவா பள்ளி வாசல் முன்பாக நடைபெற்றது.
இங்கு 'சீரான சமூக உருவாக்கத்திற்கு போதைப் பொருள் பாவனைக்கு முற்றுப் புள்ளிவைப்போம்';என்ற தொனிப்பொருளில் அஷ்செய்க் கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி,அஷ்செய்க் எம்.ஐ.எம்.ஜிபான் மதனி,கல்முனை நீதவான் நீதிமன்ற சமுதாயஞ்சார் சீர்திருத்த பிராந்திய காரியாலய பிராந்திய சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தரும்,அக்பர் ஜூம்ஆ பள்ளி வாசல் செயலாளருமான எம்.எஸ்.எம்ஸப்றீன்; ஆகியோர் உரையாற்றினார்கள் இதில் பெரும் அளவிலானோர் கலந்து கொண்டனர்;.