எந்த முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தினாலும் நாங்கள் வெற்றி பெறுவோம்


ந்த முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தினாலும் நாங்களே வெற்றி பெறுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.
மாவத்தகம பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய ஊழல் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன. தற்போது வெளிநாட்டு பத்திரிகை வெளியிட்ட செய்தியொன்றை தூக்கிப்பிடித்து எம் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.முன்னர் 18 பில்லியன் எனக்கு கிடைத்தாக கூறியனார்கள்.அந்த பணத்தை எவராவது தேடிப்பிடித்து கொண்டுவந்தால் நான் எனது கழுத்தை அறுத்துக்கொள்வேன் என்பதை நான் இன்றும் கூறுகிறேன்.அது எனக்கு பெரிய விடயமல்ல.
சந்தைக்கு,கடைத்தொருவிற்கு சென்றால் இந்த ஆட்சியாளர்களின் தாய் தந்தையினரையும் சேர்த்து மக்கள் நினைவுபடுத்துகின்றனர்.கடந்த தேர்தலில் நல்ல ஒரு பாடத்தை மக்கள் இந்த அரசுக்கு படித்துக்கொடுத்தார்கள்.அடுத்து மாகாண சபை தேர்தல் வருகிறது.அதனை உரிய காலத்தில் நடத்துவார்களோ தெரியாது.ஆனால் நாம் கூறுகிறோம்,எந்த முறையில் தேர்தலை நடத்தினாலும் நாம் வெற்றிபெறுவோம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -