(வீடியோ).,ஹனீபா GSயின் பிரமாண்ட ஸஹர் ஏற்பாடும் - ஓட்டமாவடி புதிய பள்ளிவாயல் நிருவாகத்தின் முன்மாதிரியும்.


ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட் -
நேற்று 12.06.2018 புனித ரமழானின் 27ம் நாளினை முன்னிட்டு ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளருமான ஹனீபா GS எனப்படும் மம்மலி விதானையின் தலைமையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஸஹர் ஏற்பாடானது பெரும் எண்ணிக்கையான ஜாமாத்தார்களின் பங்குபற்றலுடன் வெற்றிகரமாக இடம் பெற்று முடிந்தது

சுமார் 3500க்கும் மேற்பட்ட ஜாமத்தார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஸஹர் ஏற்பாட்டில் குறிப்பிட்ட எண்னிக்கையிலும் பார்க்க அதிகமானோர் கலந்து கொண்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது. மறுபக்கதிலே மிக நீண்ட வருடங்களுக்கு பின்னர் ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலின் நிருவாகத்தினை பொறுப்பில் எடுத்துள்ள புதிய நிருவாகத்தின் கீழ் குறித்த பள்ளிவாயலில் முதன் முதலாக இவ்வாறானதொரு பிரமாண்டமான ஸஹர் ஏற்பாடு செய்யப்பட்டு அது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளமையானது புதிய நிருவாகத்திற்கு ஜாமாத்தார்கள் வழங்கிய பாரிய ஒத்துளைப்பாக இருக்கின்ற அதே இடத்தில் பிரதேசத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு ஹனீபா GS பொறுத்தமானவர் என்பதனை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்ட விடயம் என குறித்த ஸஹர் ஏற்பாடானது எல்லோராலும் பேசப்படுகின்றது.

குறித்த ஸஹர் ஏற்பாட்டின் சுருக்கமான காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வீடியோ -

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -