அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் காணி விவகாரம்...


இ.தொ.கா பெற்றுக்கொடுத்த காணி வேறு – வழக்கு தொடர்ப்பட்டு பெற்றுக்கொண்ட காணி வேறு – இதை அரசியலாக்க வேண்டாம் அமைச்சர் ரமேஷ்வரன் அதிரடி-

க.கிஷாந்தன்-
ட்டன் ஹைலண்ஸ் கல்லூரிக்கு 10 ஏக்கர் காணியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது பலத்தாலும், சக்தியாலும் ஜனாதிபதியின் உதவியோடு பெற்றுக்கொடுத்தது.

இன்று அந்த காணி தொடர்பில் பலர் அரசியல் பேசுகின்றனர். பெற்றுக்கொடுத்த காணியை நீதிமன்றத்தால் பிடிங்கி விட்டார்கள் என ஒரு பத்திரிகையின் ஊடாக, செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இ.தொ.கா இந்த கல்லூரிக்கு பெற்றுக்கொடுத்த காணி வேறு, நீதிமன்றத்தால் உரிமையாளர்கள் பெற்றுக் கொண்ட காணி வேறு என்பதை உணர்ந்து உண்மை தெரிந்து எழுத வேண்டும் என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகனின் தொண்டமானின் பணிப்புரைக்கமைவாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அட்டன் கல்வி வலயத்தின் 65 பாடசாலைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை பயன்பாட்டுக்கு பகிர்ந்தளிக்கும் வைபம் 29.06.2018 அன்று அட்டனில் இடம்பெற்றது.

அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் ஆரம்ப பிரிவு அமைந்துள்ள பிரதான மண்டபத்தில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகனின் தொண்டமான், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல், ஏ.பிலிப்குமார், நோர்வூட் பிரதேச சபை தலைவர், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில்,

மலையகத்தின் இருப்பும் எதிர்காலமும் கல்வியின் வளர்ச்சியில் தங்கியுள்ளது. தோட்ட தொழலிலிருந்து விடுப்பட்டு படிப்படியாக முன்னேற்றமடைந்து மாற்று தொழிலுக்கு தங்களை தயார் செய்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் மலையகத்தில் கல்வி முன்னேற்றத்தை இ.தொ.கா அதிகரித்து வருகின்றது.

சௌமிய மூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்து மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு இ.தொ.கா ஊடாக பல்வேறு முன்னேற்றகரமான பல்வேறு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று மலையகத்தின் கல்வி நிலையில் மத்திய மாகாண மட்டத்தில் அட்டன் கல்வி வலயம் சிறந்த பெறுபேறுகளை பெற்று மூன்றாவது இடத்தில் தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதில் அணைவரும் பெருமைக்கொள்ள கூடிய ஒரு விடயமாகும். ஏனைய பாடசாலைகளை பார்க்கும் போது கல்வி மட்டத்தில் குறைவடைந்திருந்தாலும், அட்டன் கல்வி வலயத்தில் ஹைலண்ஸ் கல்லூரியின் கல்வி மட்டம் உயர்வடைந்து காணப்படுகின்றது.

ஆகையால் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் வளத்தை பெருக்கும் வகையில் அக்கல்லூரிக்கு 10 ஏக்கர் காணியை அரசியல் பலம் அல்லாமல் இ.தொ.கா ஜனாதிபதியின் உதவியோடு அதன் சக்தியால் இன்று பெற்றுக்கொடுத்துள்ளது. இதையும் கூட சிலர் தவறான கருத்துகளை முன்வைத்து ஒரு பத்திரிகையின் ஊடாக குறை கூறி வருகின்றனர். கல்வி முன்னேற்றம் நமது சமூகத்தின் காலத்தின் கட்டாயமாகும்.

கல்வியில் முன்னேரும் மாணவர்கள் மற்றும் பாடசாலைகளை வாழ்த்தி பேசாது. தூற்றி பேசும் சமூகமும் நம்மத்தியில் தான் இருக்கின்றது. இ.தொ.கா பாடசாலைகளில் அரசியல் செய்வது இல்லை என்பதை உணர்த்திய அவர் 60ற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்களை கோடி கணக்கான ரூபாய்களை செலவு செய்து வழங்கி வரும் நிலையில் சிலர் இதையும் தூற்றி பேசுகின்றனர்.

மாகாண அமைச்சுக்கு பணம் இல்லை என நாகூசாமல் சிலர் தெரிவிக்கின்றனர். பணம் இல்லாமல் கோடிக்கணக்கில் செலவு செய்து பொருட்களை வழங்கி வருகின்றோம். அது எவ்வாறு என சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு உண்மையை உணராத சிலர் நமது சமூகத்தில் அரசியலில் ஈடுப்பட்டு எதிர்கால கல்வி முன்னேற்றத்தை சரித்து விட நினைக்கின்றார்கள். கடந்த மூன்றரை வருடத்தில் மத்திய மாகாணத்தில் மத்திய அமைச்சு செய்திருக்கும் வேலைப்பாடுகளும், மாகாண அமைச்சு செய்திருக்கும் வேலைப்பாடுகளையும் வகுத்து பாருங்கள்.

அப்போது தெரியும் மாகாண அமைச்சியில் 8 அமைச்சு கொண்ட எனது அமைச்சின் ஊடாக பெருந்தோட்டங்களுக்கு எவ்வாறாக சேவைகள் சென்றுள்ளது என்பதையும் தெரிந்துக் கொள்ள முடியும். எம்மிடம் சக்தியும் ஜனாதிபதியின் உதவியும் எமது தேசிய தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பலமும் காணப்படுகின்றது. தைரியமாக காலத்திற்கேற்ப சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அபிவிருத்தி பணிகளை செய்து வருவோம்.

பாடசாலைக்கு நாளை எது வேண்டுமானாலும் கேளுங்கள். அதை பெற்றுத்தரவும் எம்மிடம் பணம் இருக்கின்றது என அடித்துக் கூறிய இவர் மத்திய மாகாணத்தில் மேலும் 2437 ஆசிரியர் வெற்றிடத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்க எமகே சக்தி இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -