கிழக்கு ஆளுநருக்கும் தமிழ் அரசு கட்சியின் பொதுச்செயலாளருக்குமிடையில் சந்திப்பு


அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்கும் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கிருஷ்ணப்பிள்ளை துரைராசசிங்கத்திற்குமிடையில் சந்திப்பொன்று நேற்று வௌ்ளிக்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட களுவன்கேணி பிரதான வீதி மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதனை கூடிய விரைவில் புணரமைப்பதற்குறிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட களுவன்கேணி பிரதான வீதி மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் 2008ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது இவ்வீதியினைத்திருத்தித்தருவதாகச்சொல்லி சில வேலைகளைச் செய்தார்கள் எனவும் அவ்வீதியை இன்னும் புனரமைக்க வில்லையெனவும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் அவ்வீதியினை புனரமைப்பதற்குறிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் செயலாளர் மற்றும் பணிப்பாளருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -