மலையக மக்களின் உடல், உள ரீதியான செயல்பாடுகளை முன்னெடுக்க சர்வதேச யோகா தினம் பொகவந்தலாவையில் அனுஷ்டிப்பு

க.கிஷாந்தன்-
பாரம்பரிய கலைகளில் ஒன்றான சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வாழும் கலை அமைப்பு ஆகியன ஏற்பாட்டில் சர்வதேச யோக தினம் 23.06.2018 அன்று காலை பொகவந்தலாவை சென்.மேரிஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.
மலையக மக்களின் உடல், உள செயல்பாடுகளை ஊக்குவித்து ஆரோக்கியமான வாழ்க்கையினையும், மகிழ்ச்சிகரமான வாழ்க்கையினையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்த சர்வதேச யோக தின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த யோக தின பயிற்சி நிகழ்வுகளை யோக பயிற்சியில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டவர்களால் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்த பயிற்சியின் போது தியானம், உடற் பயிற்சி, மூச்சு பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சிகள் இதன் போது வழங்கப்பட்டன.

இந்த யோகா பயிற்சிக்கு சென் மேரிஸ், ஹொலி ரோசரி, கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயம் உட்பட பிரதேச பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டதுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், பிரதேச வாசிகள் அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




















எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -