கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு மத்ரஸா நகர் பகுதியில் நீண்ட காலமாக இருந்து வந்த வடிகாண் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம்.ஜவாஹிர் அவர்களிடம் பொதுமக்கள் விடுத்த வேண்டு கோளுக்கிணங்க வெள்ளநீர்,மழைநீர் தேங்கியிருக்கும் பகுதியில் பாரிய வடிகானை ஏற்படுத்தி நீர் வழிந்தோடுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,இதன் மூலம் இருநூற்றி ஐம்பதற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளனர்.மழை காலங்களில் பிரதேச மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இவ் வேலைத்திட்டத்திட்டத்திற்கு பிரதேச மக்கள் பிரதேச சபை உறுப்பினருக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.