மத்திய மலை நாட்டில் கடும் காற்று பல வீடுகளின் கூரைகள் சேதம் - மின்சாரம் துண்டிப்பு

க.கிஷாந்தன்-
த்திய மலை நாட்டில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது. இந்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைத் தகடுகள் மற்றும் தகரங்கள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால் பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.

பலத்த காற்று வீசி வருவதனால் பல இடங்களில் மரக்கிளைகள் மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்து அட்டனில் பல பிரதேசங்களுக்கு 2018.06.09 அன்று நள்ளிரலு முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளன.

ஒரு சில பிரதேசங்களுக்கு மின் 2018.06.09 அன்று அதிகாலை வேளையில் வழமைக்கு திரும்பிய போதிலும், ஏனைய சில பகுதிகளுக்கு இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அடிக்கடி மழையுடன் பலத்த காற்று வீசி வருவதனால் மண்சரிவு அபாயப்பகுதிகளில் வாழ்பவர்களும், மரங்களுக்கு அருகாமையில் வசிப்பவர்களும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -