(வீடியோ).,உள் வீட்டில் பசியோடு இருக்கிற பொழுது பிறர் வீட்டினை பார்க்க முடியாது. இதைதான் நான் அமைச்சர் றிசாட்டுக்கு கூறுகின்றேன். உதுமான் கண்டு நாபீர்


ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட்-
மைச்சர் றிசாட் பதுர்டீனின் அரசியலினை நாங்கள் பூச்சியமாக்குவதற்கோ, அல்லது அவரை விமர்சனம் செய்வதற்கோ நாங்கள் அரசியல் செய்ய வில்லை. உண்மையாக அவர்களுக்கு வாக்களித்த சமூகத்தினை மையப்படுத்தி தங்களது சேவைகளை செய்வார்களாயின் நிச்சயமாக அவர்களால் மக்கள் மனதில் இடம் பிடித்துக்கொள்ள முடியும்.
அமைச்சர் றிசாட் பதுர்டீனுடைய விடயத்தினை பொதுவாக பார்த்தோமானால்.! உள் வீட்டில் பசியோடு இருக்கிற இருக்கிற பொழுது பிறர் வீட்டினை நாங்கள் பார்க்க முடியாது.!! என்பதைதான் ஞாபகப்படுத்துகின்றது

அந்த வகையில் தனக்கு வாக்களித்த வன்னி மக்களுடைய அடிப்படை தேவைகள் தலைக்கு மேல் பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கின்ற பொழுது அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசிற்கு இருக்கின்ற வாக்கு வங்கியினை இல்லாமல் செய்வதற்காக அம்பாறையில் அரசியல் செய்கின்றோம் என பூச்சாண்டி காட்டுவதனை எவறாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அவ்வாறு வன்னியில் நீங்கள் அபிவிருத்திகளை மேற் கொண்டிருந்தால் நேரடியாக வாருங்கள் வன்னி மக்களுடைய தேவைகள என்ன என்பதனை நாங்கள பட்டியலிட்டு உங்களுடன் பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம். ஆகவே உங்களுடைய உள் வீட்டுக்குள்ளேயே பிரச்சனைகள் இருக்கின்ற பொழுது வெளி மாவட்டங்களுக்கு சென்று நீங்கள் முஸ்லிம் காங்கிரசினுடைய வாக்கு வங்கியினை இல்லா தொழிக்க முற்படுவீர்களானால் அதற்கு எங்களால் இடமளிக்க முடியாது. அதனை நாபீர் பெளண்டேசன் எந்த வகையிலும் தடுத்து நிறுத்துவதற்கு பின் நிற்காது என்பதனை தெரிவிப்பதாக அதன் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் தெரிவிக்கின்றார். .
மேலும் குறித்த விடயத்தோடு தனது கருத்தினை தெரிவித்த நாபீர்…..ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினுடைய அரசியல் தலைமைகள் சம்மாந்துறைக்கு வருகின்ற அபிவிருத்திகளை தடுப்பதாக புதிதாக கிளம்பியுள்ள கூலிக்கு மாறடிக்க கூடிய கூட்டத்தினர் மக்கள் மத்தியில் புரளியை கிளப்பி கொண்டிருக்கின்றனர். இன்று அந்த புரளிகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்கியுள்ள தேசிய பட்டியலே இதற்கு முற்றுப்புள்ளி வைத்த விடயமாக பார்க்கப்படுகின்றது.

ஏதாவது ஒரு அபிவிருத்தி திட்டத்தினை ஏதாவது ஒரு பிரதேசத்தில் செய்ய வேண்டுமாக இருந்தால்.! அந்தந்த பிரதேசத்தில் உள்ள பிரதேச சபை, பிரதேச செயலகம், அபிவிருத்தி குழுக்களிடம் கலந்தாலோசித்து முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வாறு கூலிக்கு மாறடிப்பவர்கள் கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் எந்தவொரு வேலைத்திட்டத்தினையும் கொண்டுவராது மற்றவர்கள் அபிவிருத்திகளை தடுத்து விட்டார்கள் என கூறுவதனை சம்மாந்துறை மக்கள் நம்புவதற்கு அவர்கள் மடையர்கள் அல்ல என்பதனை முதலில் இவர்கள் விளங்கிகொள்ள வேண்டும்.

ஆகவே என்னுடைய பார்வையில் இவர்கள் பாராளுமன்ற தேசிய பட்டியலினை கண் துடைப்பிற்காக இன்று சம்மாந்துறைக்கு கொடுக்கின்றோம் என்ற நாடகத்தினை மக்கள் மத்தியில் ஓட்டுவது என்பது பகற் கனவாகத்தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கத்தில்லை. சம்மாந்துறை மக்கள் மிகவும் புத்திசாலிகளாகவும், படித்தவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆகவே இவர்கள் சம்மாந்துறை மக்களின் மனநிலைக்கு ஏற்ப அரசியல் செய்கின்றார்களா. என்பதனை எதிரே வருகின்ற தேர்தல் தகுந்த பாடத்தினை புட்டும் என்பதனை நான் இவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
என்னுடைய பார்வையில் கடந்த 25 வருடங்களாக அரசியலுக்கு அப்பால் சம்மாந்துறை மக்களுக்கு என்னுடைய சேவையினை மறை முகமாகவும், வெளிப்படையாகவும் செய்து வருகின்றவன். எனவே இப்பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர், தவிசாளராக இருக்கின்ற நெளசாட் மஜீட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹமீட் டீ., போன்றவர்களுக்கு எதிரே வருகின்ற காலங்களில் நான் நேரடியாக அரசியல் களமிறங்குகின்ற பொழுது நான் குறித்த பிரதேசத்தில் எவ்வாறான அரசியல் பலத்துடன் புதியதொரு அரசியல் கலாச்சாரத்தினை ஏற்படுத்த போகின்றேன் என்பது அவர்களுக்கு தெரியவரும்.
01-  பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ்ச தெகிழக்கு பல்கலைகழகம் சம்பந்தமாக தெரிவித்த கருத்தினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.?
02- கடந்த சில நாட்களாக அமைச்சர் றிசாட் பதுர்டீன் மற்றும் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரிவித்து வருகின்றமைக்கான காரணம் என்ன.?
03- அண்மைக்காலமாக உங்களுடைய நகர்வுகள் அனைத்தும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பானதாக இருக்கின்றமைக்கான காரணம் என்ன.?
04- தேசியப்பட்டியலினை பல வருடக்களுக்கு பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனைக்கு கொடுப்பதாக கூறி வந்த நிலையில் தற்பொழுது கொடுத்துள்ளமையும், ஒரு பாராளுமன்ற காலம் முடிவடைவதற்கு முன்னரே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில் சம்மாந்துறைக்கு கொடுத்துள்ளமையானது உங்களுடைய பார்வையில் எந்த கட்சி சிறந்ததாக உள்ளது.?
போன்ற முக்கிய கேள்விகளுக்கு உதுமான் கண்டு நாபீர் வளங்கிய விரிவான பதில்களின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ - 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -