கல்குடா வழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிச்சேனை அல்-இக்றாஹ் விளையாட்டு கழகமானது கல்குடாவில் உள்ள விளையாட்டுக்ககங்களுக்கும், ஏனைய அமைப்புக்களுக்கும் முன்மாதிரியாகவும், எடுத்துக்காட்டாகவும் வருடா வருடம் தனது இஃப்தார் நிகழ்வினை நடாத்தி வருகின்றது.
அந்த வகையில் இம்முறையும் கல்குடா தெளஹீத் ஜமாத்தின் முழுமையான வழிகாட்டலில் நடாத்தப்படும் தாருஸ் ஸலாம் அறபு காலாசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தங்களது இஃப்தார் நிகழ்வினை இன்று 03.06.2018 ஞாயிற்று கிழமை கலாசாலையின் முற்றத்தில் மிகவும் சந்தோசமான முறையில் ஏற்பாடு செய்திருந்தது..
இதே போன்று கல்குடாவில் ஏனைய அமைப்புக்களும் விளையாட்டுக்கழகங்களும் மார்க்க கல்வியினை கற்பிற்கும் அறபு கலாசாலைகளுக்கு தாங்கள் நடாத்தும் இஃப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து கொடுக்குமிடத்து அது மிகவும் பிரயோசனமான நிகழ்வாக அமையும் என்பது அங்கு சமூகமளித்த பலருடைய கருத்தாக அமைந்திருந்தது. இஃப்தார் நிகழ்வின் காணொளி பதிவேற்ரம் செய்யப்பட்டுள்ளது.
வீடியோ அல் இக்றாவின் இஃப்தார் நிகழ்வு -