அமெரிக்க - இலங்கை உறவுகள் தொடர்பில் கொழும்பு அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை


ஜூன் 21, 2018: ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்கா விலகியுள்ளதாக இராஜாங்க செயலாளர் பொம்பேயோ அறிவித்துள்ளார். அனைத்து இலங்கையர்களுக்குமான நல்லிணக்கம் மற்றும் நீடித்த சமாதானத்தின் காரணிகளை முன்னெடுப்பதன் நிமித்தம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய தொடர்ச்சியான மற்றும் உறுதியான உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற உதவுவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் நாம் முற்றிலும் இணைந்திருப்போம் என்ற அமெரிக்க அரசாங்கத்தின் உத்தரவாதத்தை தெரிவிப்பதற்காக அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் இலங்கையின் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்தார்.

2015 ஆம் ஆண்டில் 30󠇨/1 ஆம் இலக்க தீர்மானம் மற்றும் 2017 ஆம் ஆண்டில் 34/1 ஆம் இலக்க தீர்மானம் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இரு தீர்மானங்களுக்கு அமெரிக்காவுடன் இணைந்து இலங்கையும் இணை அணுசரனை வழங்கியிருந்தது. இந்த தீர்மானங்களில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு மீள உறுதிசெய்யப்பட்டுள்ளதை போன்று இந்த முக்கிய உறுதிமொழிகளை நிறைவு செயற்வதற்கு இலங்கைக்கு அமெரிக்கா தமது ஆதரவினை தொடர்ந்தும் வழங்கி வருகிறது. இந்த சர்வதேச உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் இலங்கையின் தொடர்ச்சியான முன்னேற்றமானது எமது இருதரப்பு உறவுகளிலான வளர்ச்சியை எளிதாக்கும் என்பதுடன், உலகம் முழுவதிலுமான நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடன் இணைந்து செயற்படுவதற்கான இலங்கையின் ஆற்றலையும் மேம்படுத்தும்.

இலங்கையின் முன்னேற்றங்களை நாம் உன்னிப்பாக அவதானிப்போம் என்பதுடன், எமது அண்மைய உறவுகளை பிரதிபலிக்கும் நட்புறவு மனநிலையுடன் இப்போதைக்கும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடையில் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கும் எதிர்பார்த்துள்ளோம். ஜெனீவா தீர்மானத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளவை தொடர்பில் இலங்கை மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் அமெரிக்காவும் ஆதரவளிக்கும் என்பதுடன், எமது இருதரப்பு பங்காண்மையை விஸ்தரிக்கவும் செயற்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -