இறக்காமம் அய்மன் கலை கலாசார மன்றத்தினால் றமழானை சிறப்பிற்கும் முகமாக நடாத்தப்பட்ட ஒரு நாள் வதிவிட செயலமர்வும் இப்தார் நிகழ்வும்

றக்காமம் அய்மன் கலை கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் றமழானை சிறப்பிக்கும் முகமாக நேற்று புதன் கிழமை (2018.06.13) அல் - அஷ்ரப் மத்திய கல்லூரியில் தரம் 10,11 ஆம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 'நேர் மனப்பாங்கு' எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் சமூகம் வேண்டி நிற்கும் முன்மாதிரி இளைய தலைமுறையினர் எனும் தலைப்பில் ஒரு நாள் வதிவிட செயலமர்வு நடைபெற்றது. இவ்வமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு செயலமர்வின் முடிவில் சான்றுதல்கள் வழங்கப்பட்டு அம்மாணவர்களுக்கான இப்தார் ஏற்பாடும் செய்து கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வானது தேசாபிமானி வழனயல ஊநலடழn ஊடக வலையமைப்பின் தவிசாளரும் அய்மன் கலை கலாசார மன்றத்தினுடைய தலைவருமான எஸ்.எம். சன்சீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக இறக்காமம் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.நஸீர் அவர்களும், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எச்.சபீகா மற்றும் சகோதரி வசந்தா அவர்களும், அல் - அஷ்ரப் மத்திய கல்லூரியின் பிரதி அதிபரான யு.எல். தாஹிர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


இந்நிகழ்விற்கு விரிவுரையாளர்களாக இறக்காமம் ஜம்இய்யது உலமா சபையின் தலைவரும் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் எச்.அப்துல் வஹாப் (இஸ்;லாஹி) அவர்களும், தென்கிழக்குப் பல்கலைக் கழக மாணவரான அஷ்ஷெய்க் எஸ்.எம். சஜீர் (இஸ்லாஹி) அவர்களும் கலந்து கொண்டார்கள். மேலும் இந்நிகழ்வில் அய்மன் கலை கலாசார மன்றத்தின் செயலாளர் எம்.எம்.எம் இன்ஸாப் அவர்கள் வழிநடாத்திச்சி சென்றமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -