மருதானை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் 94 குறூப் ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு மற்றும் அதனைத் தொடர்ந்து வருடாந்தபொதுக் கூட்டமும் சங்கத்தின் தலைவர் எஸ்.எம். றிபாய் மௌலானா தலைமையில் நாளை (05) செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு - 02, ரமதாஹோட்டலில் இடம் பெறவுள்ளது.
இப்தார் நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெறும் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது 94 குறூப்பின் புதிய தலைவராக அக்ரம் பாறூக் நியமிக்கப்படவுள்ளார்.
இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் றிஸ்வி மரைக்கார், கல்லூரியின் ஆளுனர் சபையின் தலைவர் பௌசுல் ஹமீத், செயலாளர் அலவி முஸ்தாக், கல்லூரியின்ஏனைய பழைய மாணவர் குறூப் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள் எனப் பலரும் கலந்து கொள்வர்.