கொழும்பு ஸாஹிரா 94 குறூப்பின் இப்தார் நிகழ்வும் வருடாந்த பொதுக் கூட்டமும்


எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ருதானை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் 94 குறூப் ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு மற்றும் அதனைத் தொடர்ந்து வருடாந்தபொதுக் கூட்டமும் சங்கத்தின் தலைவர் எஸ்.எம். றிபாய் மௌலானா தலைமையில் நாளை (05) செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு - 02, ரமதாஹோட்டலில் இடம் பெறவுள்ளது.
இப்தார் நிகழ்வைத் தொடர்ந்து இடம்பெறும் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது 94 குறூப்பின் புதிய தலைவராக அக்ரம் பாறூக் நியமிக்கப்படவுள்ளார்.

இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் றிஸ்வி மரைக்கார், கல்லூரியின் ஆளுனர் சபையின் தலைவர் பௌசுல் ஹமீத், செயலாளர் அலவி முஸ்தாக், கல்லூரியின்ஏனைய பழைய மாணவர் குறூப் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள் எனப் பலரும் கலந்து கொள்வர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -