ஸாஹிரியன்ஸ் 2008 இன் ஒன்றுகூடல் -படங்கள்




ஸாஹிரியன்ஸ் 2008 இன் ஒன்றுகூடல் மற்றும் இப்தார் நிகழ்வு 15.06.2018 இல், கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் MS காரியப்பர் மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் MS மொஹம்மட் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

மிக நீண்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெற்றமையானது பழைய பாடசாலை நினைவுகளை ஞாபகப் படுத்தியதோடு அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்க வாய்ப்பாகவும் அமைந்தது.

இவ்வாறான நிகழ்வுகளை ஒவ்வொரு வருடமும் நாடாத்தி அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என இந்த ஒன்றுகூடலில் முடிவெடுக்கப்பட்டது.

இதன்போது, ஸாஹிரியன்ஸ் 2008 சார்பாக கல்லூரிக்கு நீர் வழங்கியொன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது. இதேபோன்ற ஒரு நிகழ்வு கட்டார் வாழ் ஸாஹிரியன்ஸ் 2008 இனால் ஜூன் 8ம் திகதி கட்டாரில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -