ஸாஹிரியன்ஸ் 2008 இன் ஒன்றுகூடல் மற்றும் இப்தார் நிகழ்வு 15.06.2018 இல், கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் MS காரியப்பர் மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் MS மொஹம்மட் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
மிக நீண்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெற்றமையானது பழைய பாடசாலை நினைவுகளை ஞாபகப் படுத்தியதோடு அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்க வாய்ப்பாகவும் அமைந்தது.
இவ்வாறான நிகழ்வுகளை ஒவ்வொரு வருடமும் நாடாத்தி அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என இந்த ஒன்றுகூடலில் முடிவெடுக்கப்பட்டது.
இதன்போது, ஸாஹிரியன்ஸ் 2008 சார்பாக கல்லூரிக்கு நீர் வழங்கியொன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது. இதேபோன்ற ஒரு நிகழ்வு கட்டார் வாழ் ஸாஹிரியன்ஸ் 2008 இனால் ஜூன் 8ம் திகதி கட்டாரில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.