கல்முனை AMHஇல் அவசர சிகிச்ச்சப்பிரிவிற்கு அடிக்கல் நடுகிறார் ராஜித-பைசால்காசீமின் முயற்சிக்கு வெற்றி.


மு.இ.உமர் அலி-   
ல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நவீன வசதிகளுடன் கூடிய அவசரசிகிச்சப்பிரிவு ஒன்றிற்கான அடிக்கல் நடும் நிகழ்வொன்றிற்கு பிரதியமைச்சர் பைசால்காசீம் அவர்களது அழைப்பின்பேரில் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தன அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (17/06/2018) பிற்பகல் ஐந்துமணிக்கு கலந்துகொள்கின்றார்.

ரூபா 1449 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த அவசரசிகிச்சைப்பிரிவானது பைசால் காசீம்பிரதி அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் எடுத்த பிரயத்தனங்களின் பலனாக இன்று எம் மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. முழு தென்கிழக்கு பிராந்தியத்திற்குமான ஒரு வரப்பிரசாதமாக கிடைத்துள்ள இவ்வசதியினை பெற்றுக்கொள்வதில் பிரதியமைச்சர் பல சவால்களை எதிர்நோக்கி தன்னந்தனியாக ஒவ்வொரு தடைகளையும் மிகவும் நுணுக்கமாக தாண்டிவந்ததன் பலனாகவே இந்த நான்கு மாடிகளைக்கொண்ட கட்டிடம் அமையப்பெறவுள்ளது.

பிரதியமைச்சர் பைசால் காசீம் தாம் பிரதியமைச்சுப்பதவியை பொறுப்பெடுத்த நாளில் இருந்து இப்பிராந்தியத்தின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் பல தூரநோக்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அந்த அடிப்படையில் நிந்தவூரில் பிராந்தியத்துக்கான மகப்பேற்று மற்றும் சிறுவர் நல மருத்துவமனை ஒன்றினை நிறுவுதல்,பாலமுனை வைத்தியசாலையினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையுடன் இணைத்து பிராந்தியத்துக்கான காது,மூக்கு,தொண்டை மற்றும் வாய் தாடை முகம் (ENT,OMF surgical Unit) போன்றவற்றிற்கான சத்திரசிகிச்சை பிரிவினை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.இத்திட்டங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் தமது சம்மதத்தினை எழுத்தும்,மூலம் வழங்கியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -