அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி வட்டார காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீல் அவர்களினால் இன்று மாவடிப்பள்ளி அறபா மகளிர் அமைப்புக்கு ஒரு தொகுதி கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார வெற்றி வேட்பாளர் மாவடிப்பள்ளி மக்களின் ஏகோபித்த தெரிவு காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ முஸ்தபா ஜலீல் அவர்களின் தேர்தல் வாக்குறுதிக்கமைய அவரின் சொந்த நிதி மூலம் இன்று வெள்ளிக்கிழமை மாவடிப்பள்ளி அறபா மகளிர் அமைப்புக்கு ஒரு தொகுதி தளபாடங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மத்தியில் தலைவியிடம் கையளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -