சாய்ந்தமருது வைத்தியசாலையில் மிஸ்ரோ அமைப்பின் சிரமதானப் பணி (01) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.எம்.எஸ்.ஜெசுலுல் இலாஹி, வைத்தியர்சனூஸ் காரியப்பர் வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபை செயலாளர் றியாத் ஏ.மஜீத் ஆகியோரின் பங்குபற்றலுடன் சாய்ந்தமருது மிஸ்ரோ அமைப்பின் தலைவர்இஸ்மாயில் இக்தார், உப தலைவர் எப்.எம்.முஸ்தாக், செயலாளர் எம்.எம்.சுஜா,பொருளாளர் ஏ.எம்.இஜாஸ் உள்ளிட்ட அமைப்பின் அங்கத்தவர்கள்,வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் எனப் பலரும் இச்சிரமதானப்பணியில் கலந்து கொண்டனர்.
சிரமதானப் பணி மூலம் வைத்தியசாலை வளாகத்தினை சுத்தப்படுத்தி தந்தசாய்ந்தமருது மிஸ்ரோ அமைப்பினருக்கு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி,வைத்தியசாலை அபிவிருத்திச் சபை என்பன தங்களது பாராட்டுக்களையும்நன்றியினையும் தெரிவித்துள்ளன.