பதில் செயலாளர்கள் நியமனம்!


அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் இன்று(23) சிங்கப்பூர் நாட்டுக்கு நான்கு நாட்கள் மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தினையடுத்து கிழக்கு மாகாண மூன்று செயலகங்களுக்கான பதில் செயலாளர்கள் இன்று(23) முதல் நியமிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகச் செயலாளர் ஹஸன் அலால்தீன் தெரிவித்தார்.
இதன் படி மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளரான கே.கருணாகரன் ஆளுனர் அலுவலகத்தின் செயலாளராகவும்,மாகாண பொது நிருவாகத்தின் பிரதி பிரதம செயலாளரான திருமதி ஜே.ஜே.முரளீதரன் பிரதம செயலாளர் அலுவலகத்தின் செயலாளராகவும்,மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரான ஏ.எச்.எம்.அன்ஸார் மாகாண உள்ளூராட்சி முதலமைச்சர் அலுவலக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் நாட்டில் இருந்து இலங்கை திரும்பும் வரை இவர்கள் பதில் செயலாளர்களாக கடமையாற்றவுள்ளதாகவும் மேலும் ஆளுனரின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -