சிலருக்கு சண்டைகள் நடைபெற்றால் அதனை புதினம் பார்ப்பதில்அலாதிப் பிரியம். கிந்தோட்டை கலவரம் இடம்பெற்ற போதும், அங்குபிரதமர் சென்றிருந்தார். பாதிக்கப்பட்ட இடங்களையும்பார்வையிட்டிருந்தார். தீர்வு கிடைக்கும் வகையில் எதுவும்செய்யவில்லை. இவர் பார்வையிட்டதுக்கும் சாதாரண ஒரு மகன்பார்வையிட்டதுக்கும் இடையில் எந்தவிதமான வேறுபாடும்இருக்கவில்லை. எதிர்வரும் சனிக்கிழமை பிரதமர் அம்பாறைவரப்போகிறாராம். இவரின் வருகையை சாதாரண மக்கள் புதினம்பார்க்க வருவதை போன்றே நோக்க முடிவதாக பானதுறை பிரதேசசபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை முஸ்லிம்கள் அழுத்கமைக்கு நீதியை நிலை நாட்டக் கோரி,இந்த அரசை தங்களது முழுமையான ஆதரவோடுஅமைத்திருந்தார்கள். தற்போது இந்த அரசில் அதனோடு சேர்த்துகிந்தோட்டைக்கும், அம்பாறைக்கும் நீதியை நிலை நாட்ட வேண்டியதேவை எழுந்துள்ளது. இதுவரையும் இவற்றுக்கு நீதியைபெற்றுக்கொடுக்கும் எந்தவிதமான உருப்படியான செயற்பாடுகளும்இவ்வரசின் காலத்தில் நடைபெறவில்லை.
எதிர்வரும் சனிக்கிழமை பிரதமர் அம்பாறை வருவதால் பெரிதாகஎதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. குறித்த சம்பவம் உக்கிரமடைந்தவேளை, அவர் கள விஜயம் செய்திருந்தால், அவரைபாராட்டியிருக்கலாம். அது கலவரத்தை உக்கிரமடைய வைக்காதுதடுத்திருக்கும். கிந்தோட்டை கலவரத்தின் போதும் பிரதமர்இப்படியான ஒரு விஜயத்தை செய்திருந்தார். நஸ்டயீடுவழங்கப்போவதாக கூறியிருந்தார். விசாரணைக்காக ஒரு குழுவையும்அமைத்திருந்தார். அவைகள் வார்த்தைகளோடு மாத்திரமே இருந்தன.செயல் வடிவம் பெறவில்லை. நஸ்டயீடும் வழங்கப்படவில்லைவிசாரணைக்காக அமைத்த குழுவின் அறிக்கை என்னவென்றும்யாருக்கும் தெரியவில்லை. இதே வடிவத்தில் அம்பாறைபிரச்சினைக்கும் ஏதாவது செய்வார்கள்.
எதிர்வரும் சனிக்கிழமை பிரதமரின் அம்பாறை வருகை பயனுள்ளவகையில் அமைய வேண்டும். இனவாதிகளுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படல் வேண்டும்.வெறுமனே வருகை தந்து, எதனையும்உருப்படியாக செய்யாது செல்வதை விட வராமலே இருக்கலாம் எனகுறிப்பிட்டார்..
