பிறகு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது, "கடந்த காலங்களில் இருந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இலங்கை மக்கள் என்ற அடிப்படையில் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். என்றாலும் தற்போது சில அடிப்படைவாதிகள் மற்றும் இனவாதிகள் அந்த ஒற்றுமையினை இல்லாதொழிப்பதற்கான நிகழ்ச்சி நிரல்களை உருவாக்கி செயற்படுவதனால், நாட்டில் ஆரோக்கியமற்ற சூழல் உருவாகியுள்ளது" என்றார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "இந்த நெருக்கடி நிலைமையில் சட்டம், ஒழுங்கு அமைச்சை என்னிடம் அளித்த அதிமேதகு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அரசியலில் நீண்ட கால அனுபவமுடைய நான் இந்த வேலையை திறம்பட செய்வேன். சமய தலைவர்களிடம் மட்டுமல்லாது நாட்டு மக்களிடம் நான் வேண்டுவது, சிறிய தொகையினரான இனவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு, மிக்க பொறுமையுடனும் மிக்க புத்திசாலித்தனத்துடனும் முகங்கொடுக்க வேண்டும் என்று. எவ்வாறாயினும் மிக விரைவாக இந்த நிலைமையினை கட்டுப்படுத்தவும், நாட்டினுள் சமாதானத்தை உண்டாக்கவும் அவசியமான வேலைத்திட்டங்களை ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பேசி முன்னெடுக்கவுள்ளேன்" என்றும் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "இந்த நெருக்கடி நிலைமையில் சட்டம், ஒழுங்கு அமைச்சை என்னிடம் அளித்த அதிமேதகு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அரசியலில் நீண்ட கால அனுபவமுடைய நான் இந்த வேலையை திறம்பட செய்வேன். சமய தலைவர்களிடம் மட்டுமல்லாது நாட்டு மக்களிடம் நான் வேண்டுவது, சிறிய தொகையினரான இனவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு, மிக்க பொறுமையுடனும் மிக்க புத்திசாலித்தனத்துடனும் முகங்கொடுக்க வேண்டும் என்று. எவ்வாறாயினும் மிக விரைவாக இந்த நிலைமையினை கட்டுப்படுத்தவும், நாட்டினுள் சமாதானத்தை உண்டாக்கவும் அவசியமான வேலைத்திட்டங்களை ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பேசி முன்னெடுக்கவுள்ளேன்" என்றும் தெரிவித்தார்.