பத்து வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம்.


ரே பாடசாலைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக தரம் 6க்கும் 11க்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் கற்பித்த ஐயாயிரத்து 473 ஆசிரியர்களுக்கு இம்மாதம் இறுதிப்பகுதியில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

மூன்று கட்டங்களின் கீழ் தேசிய பாடசாலைகளுக்கான இந்த ஆசிரிய இடமாற்றம் அமுல்படுத்தப்பட இருக்கிறது. இதன் முதல் கட்டம் கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் இடம்பெற்றது.

உயர்தரப்பரீட்சையில் உயர்தர வகுப்புக்களில் ஆசிரியர்களாக பணியாற்றிய இரண்டாயிரத்து 590 ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள். இரண்டாம் கட்டம் இவ்வருடத்தின் முதல் பகுதியில்; ஆரம்பிக்கப்பட்டது. இதில் தரம் ஒன்றுக்கும், ஐந்துக்கும் இடைப்பட்ட வகுப்புகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக சேவையாற்றிய ஆயிரத்து 441 ஆசிரியர்களில் 760 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

ஆனால் கடந்த ஆண்டில் தரம் ஒன்றிற்கும், மூன்றிற்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -