5ஆவது நாளாக களத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-

ண்டியில் 5ஆவது நாளாக களத்தில் நிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இன்று (09) கட்டுகஸ்தோட்டை, எந்தேரமுல்ல பிரதேசத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட சகல வீடுகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக கிராம சேவையாளர்களினால் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. இன்று அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக, பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் விசேட படையினர் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று பிற்பகல் குருந்துகொல்ல பிரதேசத்துக்குச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், நள்ளிரவு நேரம் வரை கண்டியில் பதற்றநிலை காணப்படும் சகல பிரதேசங்களுக்கும் நேரடியாகச் சென்று அங்குள்ள பாதுகாப்புத் தரப்பினருடன் பேசி, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்தினார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -