அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள், மட்டக்களப்பு, வெபர் மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (03) வழக்கி வைக்கப்பட்டன.
212 சிங்கள மொழிமூலமான பட்டதாரிகளுக்கும் 91 தமிழ் மொழிமூலமான பட்டதாரிகளுக்கும், இந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
இந்த வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உட்பட மாகாண முன்னாள் அமைச்சர்கள், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், சமயப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.