முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா சரண்

இலஞ்சம் வழங்க முயற்சித்த குற்றச்சாட்டில் கடந்த 8 வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா சட்டத்தரணி ஊடாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

2010 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக செயற்படுவதற்காக முன்னாள் மேயர் முஸம்மிலுக்கு 42 இலட்சம் இலஞ்சம் வழங்க முயற்சித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அவருக்கெதிரான வழக்கு கொழும்பு மேலநீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெ.சி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -