களுத்துறை மாவட்டம் புலத்கோபிட்டிய பிரதேச சபைக்கு போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாரளர்களை ஆதரித்து களுப்பான தோட்டத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மலையக மக்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சென்று சேவை செய்வதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் இலக்கு இந்த தேர்தலை நாங்கள் மலையக மக்கள் அனைவரினதும் அரசியல் பிரதிநிதித்துவத்தினை உறுதிசெய்யும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதனால்தான் நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் களப்பபணிகள் இருக்கின்றபோது எமது கூட்டணி உறுப்பினர்கள் , அமைச்சர்கள் மலைய மாவட்டங்கள் அனைத்திற்கும் சென்று பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம்.
இந்த களுப்பான தோட்டத்தில் அன்று மண்சரிவு வந்தபோது பார்வையிட வந்த இ.தொ.கா குழுவினர் ஆபத்தில் இருந்த இந்த மக்களுடன மல்லுக்கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று அந்த மக்களிடம் வாக்கு வாங்குவதற்கு ஓடி வந்து மண்டியிடுகின்றார்கள். ஆனால், நாம் அந்த மக்களுக்கு இன்று நூற்றுக்கணக்கான வீடுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளோம். நாம் கேட்காமலேயே அந்த மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்.கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கடந்த காலத்தை விட அதிகளவான ஆசனங்களை தமிழ் முற்போக்கு கூட்டணி வெல்வது உறுதி என்றும் தெரிவித்தார்.
