களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு தேசிய பாடசாலையின் வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்



இறுதிப்போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ளுவாஞ்சிக்குடி பட்டிருப்பு தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகிய நிலையில் இன்று ( 20 ) மரதன் ஓட்டப் போட்டிகள் ஆரம்பமாகின.

பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் பாடசாலை பிரதி அதிபர்களான என்.நாகேந்திரன் ,எம்.சுவேந்திரராஜா, ரீ.ஜனேந்திரராஜா விளையாட்டுக் குழு உறுப்பினர்கள் ,ஆசிரியர்கள், மாணவர்கள் ,கல்விசாரா உத்தியோஸ்தர்கள் ,பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் ,களுவாஞ்சிக்குடி வீதிப் போக்குவரத்து பொலிஸார் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை வைத்தியர்கள் உத்தியோஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

விபுலானந்தர் ( சிவப்பு ) ,விவேகானந்தர் ( பச்சை ), இராமகிருஷ்ணர் ( நீலம் ) ,நாவலர் (மஞ்சள்) ஆகிய இல்லங்களுக்கிடையில் இடம்பெறும் இவ் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எம்.உதயகுமார் பிரதம அதிதியாகவும் பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன்,மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம்,பட்டிருப்பு வலய உடற்கல்வித்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு . எஸ். குலதீபன்,களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் கு.சுகுணன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -