தற்போது இலங்கையில் பல பகுதிகளிலும் சூடுபிடித்துள்ள வட்டியோடு இணைந்த பிரமிட் வியாபார முறை தொடர்பான ஆண்களுக்கான விஷேட மார்க்க சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22ம் திகதி வியாழக்கிழமை இஷா தொழுகையின் பின்னர் மீராவோடை எம்.பீ.சீ.எஸ். வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.
நம் முஸ்லிம் சமூகத்தினை வட்டி எனும் பெரும் பாவத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கிலும் வியாபாரத்தினை இஸ்லாம் காட்டித்தந்த, அங்கீகரித்த வகையில் தொடர்வதற்குமாக ஏற்பாடு செய்துள்ள இவ் விஷேட மார்க்கச் சொற்பொழிவினை கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் தலைவரும், கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல். பீர் முகம்மட் (காசிமி) MA அவர்கள் மல்டிமீடியா காட்சிகளோடு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.