இம்முறை வட்டார மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைகள் அடங்கிய கலப்பு முறையின் கீழ் தேர்தல் நடைபெறுகின்றது. இதன் கீழ் வட்டார அடிப்படையில் 60 சதவீதமான வாக்காளர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் 40 சதவீதமான பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுவார்கள்.
மொத்தமாக 43 அரசியல் கட்சிகளையும், 222 சுயேச்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் மத்தியிலிருந்து 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகளுக்காக எண்ணாயிரத்து 356 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
இந்தத் தேர்தலில் ஒரு கோடி 57 லட்சத்து 60 ஆயிரத்து 867 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். நாடெங்கிலும் 14 ஆயிரத்து 374 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறுகின்றது.
