‘டெப்லட்’ வழங்க மறுத்த அரசு

பாடசாலை உயர்தர மாணவர்களுக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் ‘டெப்லட்’ வகை கணினிகளை வழங்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வரவு-செலவுத் திட்டத்தின்போது ஆசிரியர், மாணவர்களுக்கு டெப்லட்களை வழங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, 36 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் 160 ஆயிரம் மாணவர்களுக்கும் டெப்லட்கள் வழங்கப்படவிருந்தன.

இந்தத் திட்டத்துக்காக நான்கு பில்லியன் ரூபா ஒதுக்குவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்தத் திட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதையடுத்து, அதற்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அணிவகுப்பில் மடிக் கணினிகளுடனான நடனம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் அது இணைய வழி வெளியானதையடுத்து கடும் எதிர்ப்புகளைச் சம்பாதித்ததால் அணிவகுப்பில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -