பிரபாகரனின் புகைப்படம் இட்டதால்

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் மற்றும் புலிகளின் சின்னத்துடன் உருவாக்கப்பட்ட புத்தாண்டு வாழ்த்து மடலை முகநூலில் பதிவேற்றிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க உத்தரவிட்டுள்ளார்.

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் மற்றும் அந்த அமைப்பின் சின்னம் என்பன முகநூலில் ஊடாக பிரச்சாரப்படுத்தப்படுவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களான இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி - மில்லப்பிட்டிய தோட்டத்தை சேர்ந்த விஜயகுமார் விதுஷன் மற்றும் இரத்தினபுரி சமகிபுர பகுதியை சேர்ந்த செவனு தினேஷ் குமார் ஆகிய இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -