ஏறாவூர் நகர சபையைக் கைப்பற்ற SLMC இரு குழுவாக போட்டி-யார் யாரை வெல்வார்.




சியான் -
றாவூர் நகர சபையைக் கைப்பற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் முக்கிய பதவிகளில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் கட்சியின் சின்னத்தில் தேர்தல் கேட்டு பாராளுமன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பெயரைச் சொல்லும் ஒரே ஒரு உறுப்பினராக இருக்கும் அலிஸாஹிர் மெளலானா இருவரும் ஏறாவூரைச் சேர்ந்தகர்களே ஆனால் அவ்விருவரும் இன்று கட்சியின் தலைவர் முன்னிலையில் மோதிக்கொண்டதன் பின்னர் அலிஸாஹிர் மெளலானா நகரசபைத் தேர்தலை சுயேட்சையில் கேட்பதாக இன்று அறிவித்துள்ளார்.

அப்படியானால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரே கட்சியில் இரு குழுவாக போட்டி போடும் நிலை ஏறாவூர் நகர சபைக்கு உருவாகியுள்ளது. இப்போட்டியில் யார் யாரை வெல்வது. இந்த போட்டி மூன்றாவது கட்சிக்கு வெற்றியாகவும் சந்தர்ப்பமாகவும் அமையலாம் என்பது அவதானிகளின் கருத்தாகவும் இருக்கிறது. 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -