பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தை தளமாகக் கொண்டு இயங்கிவரும் சமூக சேவை அமைப்பான ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் முதற்கட்டமாக வறிய தமிழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 17 இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செல்வாநகர் கிழக்கு சிவா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
(CARES )ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையத்தின் பெண்கள் பிரிவுக்கான தலைவி டாக்டர் திருமதி நழீரா அயாஷ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் செல்வாநகர் கிழக்கு சிவா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி பத்மநாதன், ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் டாக்டர் எம்.எம்.எம்.அயாஷ்,இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி மன்றத்திற்கான தலைவர் செட்.எம்.சஜி உட்பட ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையத்தின் பிரதிநிதிகள் பாடசாலை மாணவர்கள்,மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகளினால் தெரிவு செய்யப்பட்ட 50 தமிழ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
'மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்குவதன் மூலம் சமூகங்களிடையே சமாதானத்தையும்,நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான செயற்திட்ட முன்மொழிவு' என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு (CARES )ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



