எஸ் .எல். அப்துல் அஸீஸ்-
சமாதானமும், சமுகப்பணியும் அமைப்பின் அனுசரனையுடன் இயங்கிவரும் கல்முனை பிரதேச நல்லிணக்க மன்றத்தின் விசேட செயலமர்வு நேற்று சனிக்கிழமை கல்முனை இக்பால் சன சமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
'தேர்தல் காலத்தில் நல்லிணக்கத்தை பாதுகாத்தல்' என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் பொது மேடை அமைத்து தேர்தளில் போட்டியிடும் வேட்ப்பாளர்களை உரையாற்ற செய்தல், தேர்தல் காலத்தில் நல்லிணக்கத்தை பேனல் தொடர்பாக துண்டு பிரசூரம்களை வெளியிடல், அம்பாறை மாவட்டத்தில் உள்ள நல்லிணக்க மன்றம்கள் இணைந்து நல்லிணக்க தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு ஒன்றை நடாத்துதல், கல்முனை மாநகர சபைக்குள் தேர்தளில் போட்டியிடும் வேட்ப்பாளர்களை அழைத்து தேர்தல் காலத்தில் நல்லிணக்கத்தை பேன தாங்கள் மேற் கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக விழிப்பூட்டல் போன்ற செயற்திட்டம்களை மேற்கொள்வது என முடிவுகள் எடுக்கப்படடன.
இன் நிகழ்வுக்கு பிரதான வளவாளராக சமாதானமும், சமுகப்பணியும் அமைப்பின் நிகழ்சி திட்ட உத்தியோகத்தர் எம்.எம்.சமீர் கலந்துகொண்டதுடன், வளவாளர்களாக நிகழ்சி திட்ட இணைப்பாளர் ரீ.ராஜேந்திரன், நிகழ்சி திட்ட உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜலீல், ஆகியோர் கலந்துகொண்டனர்.