தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் அரசினால் புதிய நியமனங்கள் – பா.உ நாமல்ராஜபக்ஸ குற்றச்சாட்டு

ரசாங்கம் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் கொழும்பு துறைமுகத்தினுள் 3000தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்காக நேர்முகப் பரீட்சைகளை நடத்துகின்றது எனபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டுஉரையாற்றிய அவர்..

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணியாற்றிய 438 பேரை பனி நீக்கம் செய்வதற்குதுறைமுக அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதே வேளை, நாட்டில் தொழிலாளர் சட்டங்கள் மீறப்பட்டுள்ளன எனவும் தொழில்அமைச்சின் ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள போதும், அவரின் உத்தரவை மீறிதுறைமுக ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் ஆவர் தெரவித்தார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள போதும் தொழில்வாய்ப்பை வழங்குவதாக கூறி நடவடிக்கைஎடுப்பதன் மூலம் தேர்தல் சட்டம் மீறப்பட்டுள்ளமை மாத்திரமன்றி தொழில் சட்டத்தையும்மீறியுள்ளனர் என நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தலையீடு செய்து நடவடிக்கைஎடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

அதேவேளை, அரசாங்கம் இன்றளவில் பொதுமக்களுக்கு பலவிடயங்களை காட்டிஅச்சுறுத்தலை மேற்கொண்டேனும் தேர்தலை வெற்றிகொள்ள முயற்சிப்பதாக அவர்குற்றம் சுமத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -