அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் சாதனையாளர்களைப் பாராட்டும் நிகழ்வு-படங்கள்





சப்னி அஹமட்-

ட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் சாதனையாளர்களை பாராட்டி கெளரவம் செய்யும் நிகழ்வு இன்று (05) பாடசாலையின் அதிபர் எம்.ஏ அன்சார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோர் கலந்துகொண்டதுடன் கெளரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் செயலாளர் எஸ்.எல்.ஏ. ஹனீபா, அம்பாறை கச்சேரியின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல். தெளபீக், ஏறாவூர் நகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் உள்ளிட்டவர்களுடன் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், 2017ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வும், தவணைப் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வும், சிறந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும், பாடசாலையின் ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வும், அறபாவின் ஆளுமைகளாக செயற்பட்டும் பதவியில் முக்கிய இடத்தில் உள்ள ஆளுமைகளை கெளரவிக்கும் நிகழ்வும், அறபாவின் ஆளுமைகளாக செயற்பட்ட முதுசங்களை கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதன் போது, முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடாசாலைக்கான் தளபாடங்கள், பாடசாலை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான் சீருடைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -